Archives: டிசம்பர் 2020

வாழ்க்கையின் வெடிகள்

புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். 'ரிப்பீட்டர்ஸ்" அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.

தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் - இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.

இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.

இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் 'இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்" (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். 'அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).

ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.

உண்மையான வெற்றி

என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.

'நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்" என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்" என்று அவர் முணுமுணுத்தார்.

எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் - அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.

அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.

தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் - நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

1876ம் ஆண்டில், மத்திய இந்தியானாவில், நிலக்கரிக்காக துளையிடுபவர்கள் நரகத்தின் வாசலைக் கண்டுபிடித்ததாக நினைத்தனர். வரலாற்றாசிரியர் ஜான் பார்லோ மார்ட்டின், அறுநூறு அடியின் கீழே, அற்புhதமான சத்தங்கள் மத்தியில் தீப்பொறிகள் எழும்பின என்று தெரிவிக்கிறார். அவர்கள் பிசாசின் குகையின் கூரையை உடைத்திருப்பதாக நினைத்து, பயந்து, வேகமாக தோண்டிய துளையை மூடிவிட்டு தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

சுரங்கத் தொழிளாலர்கள், நிச்சயாமாகத் தவராகப் புரிந்துக்கொண்டனர் - சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் துளையிட்டு, இயற்கை எரிவாயுவினால் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டாலும், நான் அவர்களைக் குறித்து சற்று பொறாமைப்படுகிறேன். இந்தச் சுரங்கத் தொழிளாலர்கள், என் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி நான் காணாமலிருந்த, ஆன்மீக உலகத்தின் விழிப்புணர்வோடு இருந்தனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் இயற்கையும் ஒன்றிணைவது அறிதாக இருக்கிறது என்று நான் வாழ்வது சுலபமானதாக இருந்தாலும், 'மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல... வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு" எபேசியர் 6:12 என்பதை மறந்துவிட முடியாது.

நம் உலகில் தீமை வெற்றியடைவதைக் காணும்போது, நாம் அதை விட்டுவிடவோ அல்லது சொந்த பலத்தில் போராடவோ முயற்சிக்கக்கூடாது. ஆனால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (வச. 13-18) தரித்துக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டும். வேதத்தை வாசிப்பதும், ஊக்கப்படுவதற்காக மற்ற விசுவாகிளை தொடர்ந்து சந்திப்பதும், மற்றவர்களின் நன்மைகளை மனதில் கொள்வதும், நாம் பிசாசினுடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க உதவி செய்யும் (வச. 11). பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதையும் எதிர்கொண்டு உறுதியாக நிற்க முடியும் (வச. 13).

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

பதினேழு வயதில், டோவெய்ன், திருடுதல் மற்றும் போதைக்கு அடிமைபட்டிருந்ததால், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்னுடைய குடும்ப வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் வெகுதூரம் செல்லவில்லை, தனது தாயின் கொல்லைப்புறத்தில் நெளிந்த உலோகத்தினால் ஒரு சிறு குடிலை அமைத்து, நாளடைவில் இது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கேசினோ என்ற இடமாக அறியப்பட்டது. எனினும் தன் பத்தொன்பதாம் வயதில் டோவெய்ன் இயேசுவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலைப் பெறுவது ஒரு நீண்டதும் சோர்வானதாவும் ஆனால், தேவனுடைய உதவியாலும், இயேசுவை விசுவாசிக்கும் நண்பர்களின் ஆதரவோடும் அவர் சுத்தமாகிவிட்டடர். டோவெய்ன் கேசினோ கட்டிப் பத்து வருடங்கள் கழித்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அந்த குடிசையை ஒரு ஆலய வீடாக மாற்றினர். ஒரு காலத்தில் இருண்ட மற்றும் தடை செய்யப்பட்டதாக இருந்த இடம் இப்போது ஜெபிக்கும் மற்றும் ஆராதனைச் செய்யும் இடமாகியது.

இந்த ஆலயத்தின் தலைவர்கள், எரேமியா 33ல், டோவெய்ன் மற்றும் முன்னாள் கேசினோவுக்கு செய்ததைப் போல, தேவன் மக்களையும், இடத்தையும் எவ்வாறு குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்பதைக் காண்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி, சிறைப்பிடிக்கப்பட்ட தேவமக்களிடம் பேசி, நகரம் காப்பாற்றப்படாது என்றாலும், தேவன் தம்முடைய ஜனத்தை குணமாக்கி அவர்களைக் கட்டுவித்து, அவர்களுடைய பாவங்களற அவர்களை சுத்திகரிப்பேன் என்று பேசினார் (எரே. 33:7,8). அப்பொழுது அந்த நகரம் அவருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையுமாய் இருக்கும் (எரே. 33:9).

இதயத்தை உடைக்கும் பாவத்தைப்பற்றி நாம் விரக்தியடைந்து மனக்கசப்புடன் இருக்கும்போது, அவர் மேனன்பெர்க்கில் கொல்லைப்புறத்தில் செய்தது போல, தேவன் சுகத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வர நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.